Tuesday, November 30, 2021

கேட்டது இட்லி.. வந்தது தவளை இட்லி..?

கும்பகோணம் மாடாகுடி பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலை 8 மணிக்கு முருகேசன் மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இட்லி வாங்க சென்றுள்ளார்.

அப்போது ஹோட்டலில் இருந்து இட்லிகளை பார்சலில் வாங்கிச் சென்றுள்ளார். பார்சலை நோயாளி பிரித்து இட்லியை சாப்பிட முயன்றபோது இட்லிக்குள் தவளை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து உடனடியாக அந்த ஹோட்டலுக்கு பார்சலை எடுத்துக்கொண்டு ஹோட்டல் உரிமையாளரிடம் முருகேசன் புகார் தெரிவித்துள்ளனர்.


அப்போது அவர்கள் வாங்கிச் சென்ற இட்லிக்கு உண்டான பணத்தை கொடுத்துவிட்டு மேற்கொண்டு இட்லி ஊற்ற வைத்திருந்த மாவை அவர்கள் கண்முன்னே ஹோட்டல் உரிமையாளர் கீழே கொட்டி உள்ளார்.

இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அது பயங்கர வைரலாக பரவி வருகின்றது. 

1 comment: