Wednesday, November 24, 2021

சிலிர்க்க வைக்கிறது.. இதுதான் புதிய தமிழ்நாடா..?

தமிழ்நாட்டில் சமீப நாட்களில் பள்ளிகளில் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளின் பாலியல் புகார்களை தொடர்ந்து ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து வரிசையாக பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவியர் துணிந்து வந்து தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தாக்குதல்கள் பற்றி பேசினார்கள். இந்த நிலையில்தான் சமீபத்தில் கோவையில் தனியார்ப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.


கோவை மாணவி

தொடர் பாலியல் துப்புறுத்தல்களால் மனமுடைந்த கோவை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து அந்த பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட வழக்கில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.


கரூர் மாணவி

இதை தொடர்ந்து பாலியல் தொல்லை காரணமாக கரூரை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி கடந்த 19-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தனக்கு பாலியல் ரீதியாக நடந்த கொடுமைகள் காரணமாக அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி படிக்கும் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.


கஸ்தூரி

இந்த நிலையில் கரூர் மாணவியின் மரணம் குறித்து நடிகை கஸ்தூரி கோபமாக ட்வீட் செய்துள்ளார். அதில், பள்ளிகளில் நடக்கும் பாலியல் கொடுமையால் மேலும் ஒரு மாணவி பலியாகி இருக்கிறார். மேலும் ஒரு குழந்தையை நாம் பறிகொடுத்துவிட்டோம். இந்த முறை கெமிஸ்டரி ஆசிரியர்தான் குற்றவாளி போல.


கோபம்

அந்த சிறுமி மிகவும் தைரியமாக இருந்துள்ளார். தந்தை தாய்க்கும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இருந்தும் கூட இப்படி தற்கொலைக்கு அந்த சிறுமி தள்ளப்பட்டுள்ளார். அதிலும் போலீசாரின் அலட்சியம் சிலிர்க்க வைக்கிறது. இதுதான் இனி புதிய தமிழ்நாடா?, என்று கஸ்தூரி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.



No comments:

Post a Comment